Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 21 ஜூன், 2011

நிலமற்ற வாழ்வு

தீபச்செல்வன்

வேருடன் பிடுங்கி எறியப்பட்ட மரத்தின் இலைகள்
உதிர்ந்து நிரம்பிய யாருமற்ற நிலத்தில்
உறைந்த வீழ்ச்சியில்
கனவுகள் நிரம்பிய வாழ்வு உக்கிக் கொண்டிருக்கிறது
பறவைகள் குந்தியிருப்பதற்கு கிளைகளற்று
அழிந்த வானத்தில் அலைந்தபடியிருக்கின்றன
அழிந்த தடிகளான மரங்களில்
குதித்திறங்கும் நிலத்தின் சூரியன் காயத்தோடலைகிறது.

வாழ்வை காற்று இழுத்து தூக்கி வீசிக் கொண்டிருக்கிறது
பசிமுகங்களில் வரையப்பட்ட
அடக்குமுறையின் சித்திரங்களை
குழந்தைகள் நகமற்ற விரல்களால் கீறி வெளிகளை நிரம்புகின்றனர்.

நிலம் அழிந்து கொண்டிருக்கிறது
நிலம் தின்னும் கொடும்பறவைகள்
மகிழ்வோடு நிலப்பறவைகளை வேட்டையாடுகின்றன
சிறகுகள் கருகிய நிலப்பறவைகள் அடையும்
காலம் நிறைந்த வரலாறு மிகுந்த கனவை
பொந்துகளில் சொருகி வைத்திருக்கின்றன.

மழையும் வெயிலும் நிலப்பறவைகளை தின்னும்
காலத்தில் வாழ்வெனப்படுவது
நிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில்
கயிற்றில் தொங்கியலையும் பொதியில் அடைக்கப்பட்டிருந்தது
வெறும் நிலத்தில் வேரறுந்த பறவைகள் மேலைய
வீழ்ந்த மரத்தின் சருகாகிய இலைகள் கீழலைகின்றன.

நன்றி - கணையாழி

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...